Friday, June 1, 2007

சந்தோஷ் சுப்பிரமணியம்



ரத்தம் இன்றி கத்தி இன்றி சுதந்திரம் பெற்றலும் பெறலாம். ஆனால் இவையில்லாமல் அண்மைக்காலத்தில் தமிழ்ப்படமே வராது..வரவே வராது என்று நினைத்துக்கொண்டிருக்க - வந்திருக்கிறது - சந்தோஷ் சுப்பிரமணியம்.

பெரிய சண்டை இல்லை..குத்தாட்டம் இல்லை.. ஆபாசக் காட்சிகள் இல்லாமல் படம் செய்யலாம் என்று நிரூபித்திருக்கிறார். இயக்குனர் ராஜா.

ஒரு இனிமையான காதல் கதை. காதல் கதை என்பதைவிட தகப்பன் - மகன் உறவை அதன் சிக்கலை சொல்லும் ஒரு அருமையான கதை.

படத்தின் தலைப்பே கதையை shuttle ஆக சொல்லிவிடுகிறது.

சந்தோஷ் (ஜெயம் ரவி) தன் நண்பர்களுடன் சந்தோசமாக பொழுதுபோக்கும் ஒரு இளைஞன். தன் மகன் உட்பட தன் குடும்பத்தார் எல்லோருக்குமே எது நல்லது என்று பார்த்து பார்த்து செய்யும் அப்பா சுப்பிரமணியம்(பிரகாஷ்ராஜ்). மகன் அணியவேண்டிய உடையிலிருந்து எல்லாவற்றையும் அவரே முடிவு செய்யும்போது அதுவே மகனுக்கு முள்கிரீடமாகி விடுகிறது. தான் பார்க்கப்போகும் வேலை, தான் திருமணம் செய்யப்போகும் பெண் ஆகிய இரண்டு விஷயங்களில் அப்பாவின் முடிவுக்கு விட்டுக்கொடுக்கமாட்டேன் என்று நண்பர்களிடம் உறுதி கூருகிறான் சந்தோஷ்.

ஆனால் அதற்கும் இடம் கொடாமல் அப்பா அவனுக்கு தான் தீர்மானித்த பெண்ணையே திருமண ஒப்பந்தம் செய்து வைப்பதோடு தனது கொம்பனியிலேயே வேலைபார்க்கச் சொல்கிறார். சந்தோஷ் குழம்பிப்போய் விடுகிறான்.

இந்த நேரத்தில்தான் சந்தோஷ், ஒரு பெண்ணை(ஜெனெலியா) சந்திக்கிறான். அவனது கல்லூரியிலேயே படிக்கும் ஒரு அப்பாவியான பெண். கோயிலில் கணக்கெழுதும் ஒரு குடிகாரத்த்ந்தை (சாயஜி ஷிண்டே) யின் ஒரேயொரு மகள். அவளது அப்பாவித்தனமே, அதுவரை பெண்களை விரும்பியிராத சந்தோஷை கவர்கிறது. அவளை விரும்பத்தொடங்குகிறான்.

அப்பாவுக்கு இது தெரியவர, "அந்த பெண்ணை எங்கள் வீட்டுக்கு அழைத்து வா.. எல்லாருக்கும் பிடிக்கும்படி அவள் நடந்துகொண்டால் பார்க்கலாம்" என்கிறார் அப்பா.

அப்படி வந்தவள் தன் அப்பாவித்தனத்தினால் சந்தோஷிடம் அடிக்கடி ஏச்சும், பேச்சும் வாங்கி, இறுதியில் அவன் தன்னை இப்போது விரும்பவில்லையென்று சொல்லி தன் வீட்டுக்கு திரும்புகிறாள்.

சந்தோஷ் வீட்டில் அப்பா, அம்மா, மகன் மூவருக்கும் நடக்கும் வாதங்களின் முடிவில் அப்பா தன்னை மாற்றிக்கொள்கிறார்.

பிரகாஷ்ராஜ் தன் பாத்திரத்தை மிக யதார்த்தமாக செய்கிறார். அது மிகச் சிறப்பு. ஜெயம் ரவியும் இந்தப்படத்தில் தன் நடிப்புத் திறமையை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். இப்படியும் ஒரு பெண் இக்காலத்தில் இவ்வளவு அப்பாவியாக இருப்பாளா என்று எங்கள் புத்தி அடிக்கடி தட்டிக் கேட்டுக்கொண்டிருந்தாலும், அந்த நடிப்பில் எல்லாவற்றையும் மறந்து போய் விடுகிறோம். அது ஒரு தனி ரகம். ஜெனேலியா ஏகிளாஸ் ரகம். பஞ்சுமிட்டாய் சாப்பிட்டது போலிருக்கிறது.

தேவி ஸ்ரீபிரசாத்தின் பாட்ல்கள் இனிப்பு ரகம்.

சபாஷ் ராஜா- ஜெயம்ரவி சகோதர்களே.. ...!

No comments:

Post a Comment